மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா நகரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக ஷீலா பலேராவெ என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிரசவத்தின்போது, மருந்து என நினைத்து, திராவகத்தை பெண்ணின் வயிற்றுப் பகுதியில் மருத்துவர்கள் தேய்த்து விட்டனர்.
இதனையடுத்து, பெண்ணின் வயிற்றுப் பகுதியில் திராவகத்தால் தீக்காயம்போல ஏற்பட்டு, பாதிக்கப்பட்டார். இருப்பினும், நல்வாய்ப்பாக குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார். புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், மருந்துகள் வைக்கும் தட்டில், திராவகத்தையும் மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியாளர் தவறுதலாக வைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ். படேல் கூறினார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது
கொழுப்பு பிரச்னையால் இந்திய ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு!

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


