பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பிகாரில் தேர்தல்களில் சாதி குறித்த அடிப்படையில் வாக்களிக்கப்படுகிறதா என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, பிரசாந்த் கிஷோர் கூறுகையில், பிகாரில் மக்களவைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக நிறைய வெற்றிகளைப் பெற்று வருகிறது. பிகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில்தான் வாக்களிக்கின்றனர். பிகாரில் ஒவ்வொரு சாதி அடிப்படையிலும்தான் அரசியலில் வாக்களிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள்.
ஆனால், பிகாரில் மோடியின் சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று சொல்லுங்கள்? பிகாரில் பிரதமர் மோடியின் சாதியைச் சேர்ந்த யாரும் இல்லை.
இதன் பொருள், மக்கள் தங்கள் சாதியைத் தவிர, பிரதமர் மோடியின் பெயரிலும் வாக்களிக்கின்றனர். இந்து மதம் என்ற பெயரில் ராமர் கோவில், வளர்ச்சிக்காக அல்லது தேசியவாதத்துக்காக அவர்கள் (பாஜகவினர்) எதைச் செய்தாலும், அது வேறு பிரச்னை. ஆனால், அவர்கள் சாதி என்ற பெயரில் அவற்றை செய்யவில்லை.
பிகாரில் எம்-ஒய் (Muslim - Yadav) என்ற வகைப்பாடு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். லாலு பிரசாத் யாதவ், ஒய் (Yadav) சாதி. ஆனால், அவருக்கு 18 சதவிகித எம் (Muslim) வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் லாலுவுக்கு வாக்களிக்கின்றனர்?
அவர்கள் ஒரே சாதி அல்லவே. அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது என்பதால், லாலுவுக்கு வாக்களிக்கின்றனர். ஆகையால், சாதி என்பது ஒரு காரணி மட்டுமே; அது மட்டுமே காரணம் அல்ல என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!
கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஊழலால் மக்கள் அதிருப்தி: பிரதமர் மோடி
பிரதமர் கேரளம் வருகை: இன்றும் நாளையும் கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை!

ஏஐ மூலம் பிரதமர் மோடியின் படம் தவறாகச் சித்திரிப்பு: ஒருவர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


