நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுபோல, சிபிஎஸ்இ நிர்வாகம், பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி, 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழக்கம் போல பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும் அடுத்ததாக மே மாதம் ஒரு பொதுத் தேர்வும் நடைபெறும். இதில், பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் பொதுத்தேர்வை மாணவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டும், ஆனால் இரண்டாம் தேர்வை மாணவர்கள் விரும்பினால் அல்லது தேவை இருந்தால் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அறிவியல் உள்ளிட்ட உள்மதிப்பீடு (இன்டர்ன்) தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பொது தேர்வுகளையும் எழுதும் பட்சத்தில், எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இரண்டாம் பொதுத் தேர்வை எழுதி அதிகபட்சமாக மூன்று பாடங்களில் (அறிவியல், கணிதம், சமூக அறிவியல், மொழிப்பாடம் - இவற்றில் மூன்று) மதிப்பெண்களை இம்ப்ரூவ் செய்துகொள்ளலாம்.
ஒரு தேர்வை மட்டும் எழுதுவதா, இரண்டு பொதுத் தேர்வுகளையும் எழுதுவதா என்பதை மாணவர்களே முடிவு செய்துகொள்ளலாம்.
முதல் பொதுத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதினால், இரண்டாம் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை இறுதியானதாக எடுத்துக் கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்வு நடைபெறும் முறை, பாடப்பிரிவுகள், வினாத்தாள் என அனைத்தும் பழைய நடைமுறைப்படியே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
முதல் பொதுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும் இரண்டாம் பொதுத் தேர்வின் முடிவுகள் ஜுன் மாதத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


