இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஈரான், இஸ்ரேலில் இருந்து மொத்தம் 3,100 இந்தியர்கள் மீட்பு!

போர் நடைபெற்று வந்த ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து மூலம் இதுவரை 3,170 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

News image
ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களில் சிலர்- ANI
Updated On :24 ஜூன் 2025, 3:26 pm

DIN

போர் நடைபெற்று வந்த ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து மூலம் இதுவரை 3,170 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டிலிருந்து இன்று (ஜூன் 24) காலை 292 இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், மாலையில் மேலும் 281 பேர் பத்திரமாக நாடு திரும்பினர். இதில் நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர், இலங்கையைச் சேர்ந்த மூவரும் அடங்குவர்.

இதேபோன்று சி -17 கனரக விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து 594 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். மேலும் 400 பேர் ஜோர்டார், எகிப்து வழியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்று சேர்ந்த 161 இந்தியர்கள், அங்கிருந்து தனி விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, பாரசீக வளைகுடா நாட்டில் இருந்து புதிதாக 2,576 இந்தியர்கள் பத்திரமாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனால், ஈரான், இஸ்ரேல் நாடுகளில் இருந்து இதுவரை மீட்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,170 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.