ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கேரளத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து சீரானது

இஸ்ரேல் - ஈரான் சண்டை நிறுத்தம் எதிரொலி...

News image

விமான போக்குவரத்து

Updated On :24 ஜூன் 2025, 3:29 pm

வளைகுடா நாடுகளுக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்குமான விமான போக்குவரத்து சீரானது. இதனால் இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் விமான நிலையங்களிலிருந்து அரபு நாடுகளுக்கு தினசரி பல விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் இரவு, நள்ளிரவிலேயே இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில், ஈரான் - இஸ்ரேல் சண்டை திங்கள்கிழமை(ஜூன் 23) தீவிரமடைந்ததால் அன்று மாலையிலிருந்தே மத்திய கிழக்காசிய பகுதிகளுக்கான பல விமானங்களின் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. சில விமானங்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில், தற்காலிகமாக தடைபட்டிருந்த விமான சேவை, இஸ்ரேல் - ஈரான் சண்டை நிறுத்தம் எதிரொலியால் இன்று(ஜூன் 24) சீராகியுள்ளது. அவையனைத்தும் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று கொச்சி சர்வதேச விமான நிலையம் லிமிடட் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அபு தாபி, துபை, ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.