மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் பயணியைத் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்..

News image

பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் | காயமுற்ற பயணி - X

Updated On :23 ஜூன் 2025, 10:34 am

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரயிலில் கடந்த 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங், தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். அப்போது தனது குடும்பத்தினருக்கு வேறு வரிசையிலும் தனக்கு வேறு வரிசையிலும் சீட் இருந்ததால், தனது குடும்பத்தினரின் அருகில் உள்ள பயணியை தனது இருக்கையை மாற்றிக்கொள்ள கூறியிருக்கிறார் ராஜீவ் சிங். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜான்சி ரயில் நிலையத்தில் ஏறிய ராஜீவ் சிங்கின் ஆதரவாளர்கள், அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். சுமார் 5-6 பேர் அவரை அடித்த நிலையில் அவரது வாய், மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. ஒருவர் செருப்பைக் கொண்டும் அடித்துள்ளார்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

அந்த பயணி தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள ஜான்சி ரயில்வே எஸ்.பி. விபுல் குமார், சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையிலும் விசாரணை அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.