‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது, சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற சம்பவம் குறித்து பதிவிடக் கூடாது என்று அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து மக்களவை அரங்கத்தில் குதித்த சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோா் புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியிட்டு கோஷமிட்டனர். அவர்களை சில எம்பிக்கள் மடக்கிப் பிடித்தனர்.
அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆசாத் ஆகிய இருவா் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூச்சலிட்டு, புகைக் குப்பிகளில் இருந்து வண்ண நிற வாயுவை வெளியிட்டனர்.
பின்னர், இந்த சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இருவரும் தலா ரூ. 50,000 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும், தில்லியைவிட்டு வெளியேறக் கூடாது, வாரம் மூன்று முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Summary
The Delhi High Court has granted bail to Neelam Azad and Mahesh Kumawat, who were arrested in the ‘2023’ Parliament security breach case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய விடுதிகளுக்கு ரூ.573 கோடி நிதி ஒதுக்கீடு!
தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு

8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


