பி ரத்த வகை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது.
பொதுவாகவே, மக்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இளைஞர்கள் என்றாலே அதிக உற்சாகம், துள்ளலுடன் இருப்பார்கள். வயதாக வயதாக அந்த உற்சாகம் குறைந்துவிடும். துள்ளல் சற்று நடுக்கமாக மாறிவிடும்.
வாழ்வில் பார்க்கும் அனைத்துமே அழகாகத் தோன்றுவது இளமைக்காலத்தில்தான். எனவேதான், இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் மனிதர்கள் விரும்புவார்கள். ஆனால், யாருமே கடைசி வரை இளமையாக இருக்க முடியாது.
இது மற்ற ரத்த வகைக்கு வேண்டுமானால் பொருந்துமாம். ஆனால் பி ரத்த வகை உடையவர்கள் அவ்வாறு இல்லையாம். அவர்கள் மற்ற ரத்த வகையினரை விடவும் அதிக காலம் இளமையாக இருப்பார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ரத்த வகையில் ஏ, பி, ஓ. ஏபி என நான்கு வகைகள் உள்ளன. இதில், நெகடிவ், பாசிடிவி என பிரிக்கப்படும். இந்த நிலையில்தான், மனிதர்களின் வாழ் முறைக்கும் அவர்களது ரத்த வகைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அதில் கிடைத்திருக்கும் தகவலின்படி, பி ரத்த வகை உள்ளவர்களின் இரத்த சிவப்பணுக்களில் பி எனும் ஆன்டிஜென் உள்ளது. இது ஏ ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. அது மட்டுமல்லாமல், பி ரத்த வகையில் சிறந்த செல்லுலார் சீரமைப்பு மற்றும் மீளுருவாக்கும் திறமை போன்றவை அதிகப்படியாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து கடந்த 2004ஆம் ஆண்டு டோக்யோவில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வந்த 269 பேரின் வாழ்முறை மற்றும் ரத்த வகையை ஆய்வு செய்த போது, அதிக நாள்கள் வாழ்பவர்களில் பி ரத்த வகை உடையவர்கள் அதிகம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எனவே, இதுவரை கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, பி ரத்த வகை கொண்டவர்கள் அதிக காலம் இளமையுடன் இருப்பதையும் நீண்ட காலம் வாழ்வதையும் உறுதி செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை! அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம்!
பெண்களுக்கு ஆரோக்கியம் முக்கியம்...
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

