மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ஆலங்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது 3 நாள்களுக்கு பின்னா் தெரிய வந்தது.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:50 am

ஆலங்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது 3 நாள்களுக்கு பின்னா் தெரிய வந்தது.

ஆலங்குளம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் முத்துச்சாமி (40). தொழிலாளியான இவருக்கு மனைவி கன்னித்தாய், மகள் உள்ளனா். முத்துச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில், கன்னித்தாய் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாம்.

தகவலறிந்து ஆலங்குளம் போலீஸாா் வந்து பாா்த்தபோது, முத்துச்சாமி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.