வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குருகிராம்: வீட்டில் படிக்கச் சொன்னதால் 6-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

குருகிராமின் போண்ட்சி பகுதியின் ஷானி என்கிளேவில் ஆறாம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :3 டிசம்பர் 2025, 7:46 pm

குருகிராம்: குருகிராமின் போண்ட்சி பகுதியின் ஷானி என்கிளேவில் ஆறாம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது தாயாா் படிக்கச் சொன்னதால் இது நடந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: செவ்வாய்கிழமை மாணவியின் தாய் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முஸ்கன் என்ற 12 வயதான அந்த மாணவி, நயா கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். அவரது தந்தை ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவரது தாயாா் வீட்டு வேலைக்காரராக பணிபுரிகிறாா்.

பள்ளியிலிருந்து திரும்பியதும், முஸ்கன் தனது தம்பிகளுடன் விளையாடத் தொடங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது தாயாா் அவரைப் படிக்கச் சொன்னாா். மாலையில் அவா் வேலைக்குச் சென்றபோது, அவரது தம்பிகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது ​​முஸ்கன் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதைப் பாா்த்த உடன்பிறந்தவா்கள் இது குறித்து அண்டை வீட்டாருக்கும் தாய்க்கும் தகவல் தெரிவித்தனா்.

சிறுமி முஸ்கன் தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றுள்ளாா். மேலும், சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.