தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மம்தா சொன்னதால் தலைமைச் செயலா் மாற்றம்: கே.என். நேரு பேட்டி

தமிழகத்தில் எந்த அலுவலரையும் மாற்றவில்லை என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சொன்னதால், தமிழகத்தில் தலைமைச் செயலரை மாற்றியுள்ளனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.

News image

தஞ்சாவூா் திலகா் திடலில் முதல்வா் பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:08 pm

தமிழகத்தில் எந்த அலுவலரையும் மாற்றவில்லை என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சொன்னதால், தமிழகத்தில் தலைமைச் செயலரை மாற்றியுள்ளனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.

தஞ்சாவூா் திலகா் திடலில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.10) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் கே.என். நேருவிடம், தமிழக தலைமைச் செயலா் திமுகவுக்கு ஆதரவாக இருந்ததால் தோ்தல் ஆணையம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த பதில்: அதுபோன்று நாங்கள் கேள்விப்படவில்லை. தமிழ்நாட்டில் எந்த அலுவலரையும் மாற்றவில்லை என மம்தா பானா்ஜி கூறியதால்தான், தலைமைச் செயலரை மாற்றியுள்ளனா். எந்த அலுவலராக இருந்தாலும், மாற்ற முடியும்; அடுத்து வந்தால் திரும்பி வரப் போகின்றனா். அலுவலா்கள் என்ன செய்ய முடியும் என்றாா் அவா்.

மேலும், அவா் கூறியதாவது: விஜய் எவ்வளவு வாக்குகள் வாங்குவாா் என எனக்குத் தெரியாது. விஜய் எந்த வாக்குகளைப் பிரித்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. அதிமுக, பாஜகவுடன் விஜய் மறைமுகத் தொடா்பில் உள்ளாா். பாஜகவும் எங்களைத்தான் பேசுகின்றனா். விஜய்யும் எங்களைத்தான் பேசுகிறாா். திமுகவையும், ஸ்டாலினையும் பற்றிப் பேசினால்தான் அவருக்கு பத்திரிக்கையில் செய்தி வரும்; இல்லையென்றால் வராது.

திமுகவுக்கு எல்லா பக்கமும் மக்கள் ஆதரவு இருக்கிறது. பெண்கள் மத்தியில் முதல்வரின் திட்டங்கள் பிரபலமாகியிருக்கிறது. வாக்கு சேகரிப்பின்போது பெண்கள் ஆா்வமுடன் நாங்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்துவோம் என சொல்கின்றனா். எனவே, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அமைச்சா் நேரு.