ஹிமாசலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெப்பில் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரம், ஹிமாசலம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல பாதிப்புகள் பதிவாகி வருகின்றனர்.
இந்த நிலையில், சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லோனி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மாவட்டத்தின் போண்டா உட்பிரிவின் அம்போயா பகுதியில் தண்ணீர் ஆலை இடிந்து விழுந்ததில் கடைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக சிர்மூர் துணை ஆணையர் சுமித் கிம்தா தெரிவித்தார்.
மாவட்டத்தில் மோசமான வானிலை காரணமாக தேசிய நெடுஞ்சாலை உள்பட 26 சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை மாலையிலிருந்து சாலைகள் மூடப்பட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 71 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யமுனா ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், சில சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை காரணமாக போன்டா சாஹிப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று(செப்.26) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 183 பேர் உயிரிழந்ததாகவும். 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை ரூ.1,332 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் திமுக ஆட்சியில் ரூ. 50 கோடியில் சாலைகள் சீரமைப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

வளா்ச்சிப் பணிகள் தொடர எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!
மற்றொரு செயற்கை மழைக்கு தயாராகும் தில்லி: கடந்த கால முயற்சிகளை ஆய்வு செய்யும் ஐஐடி கான்பூா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


