காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ அங்கெல்லாம் ஊழல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹரியாணாவின் கோஹானாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பான காங்கிரஸை கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மற்றும் அதன் மீதான வெறுப்பு அவர்களின் ரத்தத்தில் ஊரி இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: அரசு விடுதியில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பலி!
காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் இடத்தில் எல்லாம் ஊழல் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக முதல்வர்களும், அமைச்சர்களும் உள்கட்சி பூசலில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகத்தின் முதல்வர், துணை முதல்வர்கள் உள்கட்சி சண்டையில் மும்முரமாக உள்ளனர். தெலங்கானா மற்றும் ஹிமாசலிலும் இதே நிலைதான். எனவே ஹரியாணா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திய அரசு நடைமுறையில் ஊழலை ஏற்படுத்தி அதனை வளர்த்தெடுத்த கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவில் ஊழலில் முதன்மையாகக் காங்கிரஸ் விளங்குகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸால் ஹரியாணா கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயிகளின் நிலங்கள் சுரண்டப்பட்டது. ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்க வேண்டும்.
இதையும் படிக்க: வேட்டையன் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப் பச்சன் குரல்!
தவறுதலாகக் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உள்கட்சிப் பூசலால் ஹரியாணாவை அழித்துவிடும். காங்கிரஸ் ஒட்டுமொத்த ஊழல் நிறைந்த கட்சி என்று அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


