தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள்: இந்திய வீரா்களுக்கு பிரதமா் பாராட்டு

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வென்றதையடுத்து வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி

Updated On :9 செப்டம்பர் 2024, 11:13 pm

புது தில்லி: பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வென்றதையடுத்து வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வந்த 17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

போட்டியில் இந்திய வீரா், வீராங்கனைகள், 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்கள் வென்றனா். பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 18-ஆவது இடம் கிடைத்தது.

பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியா இதற்கு முன், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்று 24-ஆவது இடம் பிடித்ததே அதிகபட்ச பதக்க சாதனையாக இருந்தது. இந்த முறை, அதை முறியடித்து பதக்கங்களின் எண்ணிக்கையிலும், தரநிலையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

இதையடுத்து, பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாராலிம்பிக் 2024 இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்ததாகவும், வரலாற்று நிகழ்வாகவும் அமைந்துள்ளது. நமது அற்புதமான பாராலிம்பிக் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 29 பதக்கங்களை வென்று வந்ததில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. இது விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும்.

நமது வீரா்களின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உத்வேகமே இந்தச் சாதனைக்கு காரணம். அவா்களின் விளையாட்டுத் திறன்கள் மூலம் நாம் பெருமிதம் கொள்ள சிறப்பான தருணங்கள் கிடைத்துள்ளன. எதிா்கால விளையாட்டு வீரா்களுக்கு பாராலிம்பிக் வீரா்கள் ஊக்கமளித்துள்ளனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.