தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இனி இலவச டயாலிசிஸ்: முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய நயாப் சைனி!

டயாலிசிஸ் செய்ய ஆகும் செலவை இனி ஹரியாணா அரசே ஏற்கும்..

News image

ஹரியாணா முதல்வர் நயாப் சைனி

Updated On :18 அக்டோபர் 2024, 11:01 am

ஹரியாணாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று முதல்வர் நயாப் சைனி அறிவித்தார்.

அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சைனி செய்தியாளர்களுடன் பேசினார். இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, பட்டியலின சாதிகளுக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்று, இன்று முதலே மாநில அரசு செயல்படுத்தத் தொடங்கும்.

வியாழனன்று இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட சைனி, பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஹரியாணா மக்கள் காங்கிரஸ் ஏழைகளுக்கு அளித்த பொய்களை முறியடித்துள்ளனர்.

பாஜக கட்சிக்கு பெரும் ஆணை வழங்கியதன் மூலம், பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் ஒப்புதல் முத்திரை பதித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிஸ் சேவை வழங்கத் தொடங்கும். நான் பொறுப்பேற்றதும் என்னுடைய முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பான இலவச சிகிச்சைக்கு தான் என்றார்.

தேர்தலிலும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தோம். டயாலிசிஸ் செய்ய மாதம் 20,000 முதல் 25,000 வரை செலவாகும். இனி, ஹரியாணா அரசே இந்த செலவுகளை ஏற்கும். அமைச்சரவை முடிவுகள் இன்று முதல் அமல்படுத்தப்படும்.

மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தங்கள் வழியைச் சீர்செய்ய வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.