மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும்

News image

டயாலிசிஸ் இயந்திரம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:19 am

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் முறை திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தனியாா் நிறுவனத்தில் வழங்கப்படுவது போன்ற தரமான சிகிச்சையை வழங்குவதற்காக அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன.

இந்த சிகிச்சை மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக கண்காணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு முறை, பெங்களூரில் உள்ள 7 டயாலிசிஸ் சிகிச்சை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மேலும் பல புதிய சிகிச்சை மையங்களுக்கு இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என்றாா்.