தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மகா நவமி: தலேஜு பவானி கோயிலில் திரண்ட பக்தர்கள்!

குமாரி பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இக்கோயிலில்.

News image

தலேஜு பவானி கோயில்

Updated On :11 அக்டோபர் 2024, 10:42 am

நேபாளத்தில் பிரசித்தி பெற்ற தலேஜு பவானி கோயில் மகா நவமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

தலேஜு பவானி கோயிலில் சிறுமிகளைத் தேவியின் அவதாரமாகக் கருதி போற்றி வழிபடுகின்றனர். நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை இந்திர யாத்திரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த நிலையில், நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று மகா நவமி தினத்தன்று தலேஜு பவானியின் சிலையை கோயில் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. நேவாரி மக்களின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் தலேஜு பவானியை இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு வருடத்திற்கு ஒருமுறை சடங்குகளும், பூஜைகளும் செய்து வழிபடுகின்றனர்.

குமாரி பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இக்கோயிலில். அங்குள்ள அம்மன் குமாரி வடிவில் பூமிக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.ண

நேபாள நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாக தலேஜு பவானி கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் குறிப்பாக சிறுமிகள் அதிகம் வழிபடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.