மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நன்றி: ராகுல் காந்தி!

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

News image

ராகுல் காந்தி

Updated On :9 அக்டோபர் 2024, 7:21 am

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் இந்தியாவின் வெற்றி அரசியலமைப்பின் வெற்றி, ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி என்று அவர் கூறினார்.

2019ல் அமலான 370வது பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் நடந்த முதல் தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி சிறப்பான முறையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயத்தில், ஹரியாணாவில் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பையும், காங்கிரஸின் மறுபிரவேச நம்பிக்கையையும் முறியடித்து பாஜக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

ஹரியாணா தேர்தல் முடிவுகள் ஆய்வு

ஹரியாணா தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கவனித்து வருவதாகவும், எதிர்பாராத முடிவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஹரியாணா மக்கள் ஆதரவிற்கும், அயராத கடின உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.