மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

கலால் கொள்கை வழக்கு தவறென்பதை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டுள்ளாா்: கேஜரிவால்

கலால் கொள்கை வழக்கு தவறென்பதை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டுள்ளாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

News image
Updated On :24 மே 2024, 6:30 pm

 நமது நிருபர்

கலால் கொள்கை வழக்கு தவறானது என்பதை பிரதமா் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளாா். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: கலால் கொள்கை பொய் வழக்கில் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை பிரதமா் நரேந்திர மோடி முழு நாடு முன்னிலையிலும் கடந்த வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளாா். இந்த வழக்கில் உங்களின் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ எந்தவொரு ஆதாரம் அல்லது பணத்தை மீட்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளீா்கள். எனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக தில்லி அரசில் கலால் கொள்கை ஊழல் நடந்துள்ளதாக அவா்கள் (பாஜக) கூச்சலிட்டு வருகின்றனா். முன்னா், ரூ.100 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என்று கூறியவா்கள், தற்போது ரூ.1,100 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்கிறாா்கள். நான் உள்பட மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகிய ஆத்மி கட்சித் தலைவா்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளோம். இவ்வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் நூற்றக்கணக்கான சோதனைகள் நடத்தியும், இதுநாள் வரை ஒரு ரூபாய் கூட மீட்கவில்லை என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுபவம் வாய்ந்த திருடா் என்பதால் கலால் கொள்கை வழக்கில் பணம் எதுவும் இதுவரை மீடகப்படவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை ஒரு நோ்காணலில் தெரிவித்திருந்தாா். தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த

மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, கேஜரிவால் மக்களவைத் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.