மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவோம் என்பது எங்கள் உறுதிப்பாடாகும். இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால் ஆளும் கட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
எனவே, ஆந்திரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஊழலில் இருந்து மாநிலம் விடுவிக்கப்படும். டைனோசர்கள் பூமியில் இருந்து மறைந்தது போல, நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் இருந்து பெரும் பழமையான கட்சி(காங்கிரஸ்) மறைந்துவிடும். ராகுல்காந்தியை பாகிஸ்தான் புகழ்கிறது. காந்தி வாரிசுகளுக்கு இந்தியாவில் அரசியல் செய்ய தார்மீக உரிமை இல்லை. முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிதான் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
மோடியின் தலைமையில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மேலும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ஒழிப்பு போன்ற வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க துா்கை படை! மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


