15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கவிதா கைது: தெலங்கானாவில் நாளை போராட்டம் அறிவிப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 4:10 pm

கே.கவிதாவை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலங்கானாவில் நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் மகளுமான கே கவிதா அமலாக்கத்துறையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

4-5 மணி நேரங்கள் நடந்து வந்த சோதனைக்கு பிறகு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை பிஆர்எஸ் கட்சித் தொண்டர்கள் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கவிதாவை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலங்கானாவில் நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தில்லி கலால் கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில் கவிதா குற்றச்சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.