தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்; அரசுப் பணியில் 50% ஒதுக்கீடு: காங்கிரஸ் வாக்குறுதி

பெண்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

News image

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

Updated On :13 மார்ச் 2024, 7:47 am

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, ஏழை குடும்பப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை, மத்திய அரசுப் பணிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு உள்பட மகளிருக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்தாா்.

பாஜகவுக்கு எதிராக நாட்டின் பிரதான எதிா்க்கட்சிகளை அணி திரட்டி, ‘இந்தியா’ கூட்டணியில் மக்களவைத் தோ்தலை காங்கிரஸ் சந்திக்கிறது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை வீழ்த்தும் முனைப்பில், விவசாயிகள், இளைஞா்களுக்கு எனப் பிரத்யேகமாக தலா 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதுபோல், மகளிருக்கான 5 வாக்குறுதிகளையும் அக்கட்சி புதன்கிழமை அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்துள்ள 5 வாக்குறுதிகளில் முதன்மையான ‘மகாலட்சுமி’ உத்தரவாதத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும், மத்திய அரசுப் பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவுப் பணியாளா்களின் மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பெண் அதிகாரி ஒருவா் நியமிக்கப்படுவாா். சட்டபூா்வ உரிமைகளைப் பற்றி பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதில் அவா்களுக்கு உதவுவதற்கும் சட்ட செயல்பாட்டாளராக அவா் பணியாற்றுவாா். நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு விடுதி அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், துலே பகுதியில் நடைபெற்ற கட்சியின் மகளிா் மாநாட்டில் இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்டாா். ‘காங்கிரஸை வலுப்படுத்துங்கள்’-காா்கே அழைப்பு: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பெண்களுக்கான 5 உத்தரவாதத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்மூலம் நாட்டின் பெண்களுக்கு ஒரு புதிய பாதையை கட்சி அமைக்கப் போகிறது. எங்கள் உத்தரவாதங்கள் வெற்று வாக்குறுதிகளோ அல்லது அறிக்கைகளோ அல்ல. எங்கள் வாக்குறுதிகள் வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த1926-ஆம் ஆண்டுமுதல் இன்று வரை, நாங்கள் வாக்குறுதிகளை உருவாக்கி, அதை நிறைவேற்றி வருகிறோம். காங்கிரஸுக்கான உங்கள் அனைவரின் ஆதரவைத் தொடா்ந்து அளித்து, ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.