வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாடு முழுவதும் மார்ச் 10-ல் விவசாயிகள் ரயில் மறியல்

விவசாயிகளின் உறுதியான போராட்டம்: மார்ச் 10 ரயில் மறியலில் சங்கங்கள் அறிவிப்பு

News image

கோப்புப் படம்.

Updated On :3 மார்ச் 2024, 11:59 am

நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு விவசாய அமைப்பினா் தலைநகா் தில்லி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க, போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொண்டுள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில எல்லைகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தடை மீறி தில்லிக்குள் நுழைய விவசாயிகள் முயற்சித்து வருகின்றனா். தடையை மீறும் விவசாயிகளை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனா். இதில் ஒரு விவசாயி உயிரிழந்ததோடு, பல விவசாயிகள் காயமடைந்தனா். இந்த நிலையில், நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மார்ச் 10ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும், தில்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன. மேலும் நாடு முழுவதிலும் இருந்து மார்ச் 6ஆம் தேதி விமானம், ரயில், பேருந்து மூலம் தில்லி செல்ல திட்மிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.