மக்களவைத் தலைவர் நாளை தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்தியா கூட்டணி தரப்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தால் நாளை காலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறும்.
அவ்வாறு நடைபெற்றால், நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். இதுவரை அப்பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை.
18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு (240) தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்தது.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு கட்டாயமாகியுள்ளது.
17-வது மக்களவையின் தலைவராக இருந்த ஓம் பிர்லா மீண்டும் தலைவர் பதவிக்கு விண்ணிப்பிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை இடைக்காலத் தலைவராகவுள்ள பா்த்ருஹரி மகதாப்பும் விண்ணிப்பிக்க வாய்ப்புள்ளது.
மேலும், கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தரப்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க போகும் நபரின் பெயர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், மக்களவைத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கா அல்லது கூட்டணிக் கட்சிக்கா என்பதும் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும்: மொடக்குறிச்சி திமுக கூட்டணி வேட்பாளா்

தோ்தல் தோல்வி அச்சத்தால் 23 கட்சிகளுடன் திமுக கூட்டணி! - சீமான்

நாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்

திமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


