தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அரியவகை செவித்திறன் குறைபாடு: பிரபல பாடகிக்கு நேர்ந்த சோகம்!

பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக் அரியவகை செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News image

பாடகி அல்கா யாக்னிக்

Updated On :18 ஜூன் 2024, 8:26 am

இந்தியாவின் பிரபல பாடகியான அல்கா யாக்னிக், தனக்கு அரிதான செவித்திறன் குறைபாட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடியுள்ள 58 வயதான பாடகி அல்கா யாக்னிக், இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பிண்ணனி பாடகியாக 2 தேசிய விருதுகளை வென்றுள்ள அல்கா யாக்னிக், கடந்த 2022-ம் ஆண்டில் 15.3 பில்லியன் யூடியூப் பார்வைகளைப் பெற்று, கின்னஸ் உலக சாதனையில் உலகில் அதிகம் பேரால் கேட்கப்பட்ட பாடகர் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

80,90-களில் மிகப் பிரபலமான ஏக் தோ தீன், சோலி கே பீச்சே க்யா ஹே, தால் சே தால் போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், ஓரம்போ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘இது என்ன மாயம்’ பாடலைப் பாடியுள்ள இவர், மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

இவர் நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ’நான் சில வாரங்கள் முன்பு விமானத்தில் இருந்து வெளியேறும் போது திடீரென்று என்னால் எதையும் கேட்க முடியவில்லை. சில வாரங்கள் கழித்து கொஞ்சம் தைரியம் வந்ததால் இப்போது இதனை வெளியே சொல்கிறேன்.

எனக்கு வைரஸ் தாக்குதலால் செவிகளில் மிகவும் அரிதான உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன்.

எனக்காக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஹெட்ஃபோன்களில் இசையை மிக சத்தமாக வைத்துக் கேட்பதைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள்.

இதனை, உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் அனைவரின் அன்புடன் நான் என் வாழ்க்கையில் மீண்டு வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிக அளவு சத்தத்தைக் கேட்பது, நோய்த்தொற்று பாதிப்பு, தலையில் அடிபடுதல் அல்லது அதிர்ச்சியடைதல், வயோதிகம் போன்ற காரணிகளால் இந்த அரிய வகை செவி உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.