தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சமணர் சிலைகளை அகற்றிய இடத்திலேயே வைக்க குஜராத் அரசு உத்தரவு!

குஜராத்தில் காளிமாதா கோவில் பாதையிலிருந்து அகற்றபட்ட சமணர்களின் சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2024, 6:47 am

குஜராத்தின் பஞ்சமகால் மாவட்டத்தின் பவகாத் மலையிலுள்ள காளிகா மாதா கோவில் படிக்கட்டுகளில் இருந்த சமணத் துறவிகளின் சிலைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீண்டும் அதே இடத்தில் வைக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவிலை புதுப்பிக்கும் திட்டத்தில் படிக்கட்டுகளின் அருகிலிருந்த பழையக் கொட்டகையை அகற்றும்போது சிலைகள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயின் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் மீண்டும் சிலை இருந்த இடத்திலேயே வைக்கப்பட்டது.

தீர்த்தங்கரர்கள் எனப்படும் சமணத் துறவிகளின் சிலைகள் கோவிலின் அதிகம் பயன்படுத்தப்படாதப் பாதையிலுள்ள படிக்கட்டுகளின் இருபுறமும் இருந்துள்ளன. நேற்று (ஜூன் 17) ஜெயின் சமூகத்தினர் சிலர் அங்கிருந்த 7 சிலைகள் இல்லாததைக் கண்டுள்ளனர். பின்னர், அந்த சிலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் ஒன்றாக வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே, ஜெயின் சமூகத்தினர் இணைந்து வதோதரா, ஹலோல், சூரத் பகுதியில் போராட்டம் நடத்தி சிலைகளை இருந்த இடத்திலேயே வைக்குமாறு அங்குள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்களைக் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவகாரத்தில் தலையிட்டு, முதல்வர் பூபேந்திர படேலிடம் கலந்தாலோசித்து சிலைகளை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்க கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஜெயின் சமூகத் தலைவரான கிரண் துக்காட் என்பவர் காவல்துறையில் அளித்த மனுவில், காளிகா மாதாஜி கோவிலின் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் சமணர்களின் சிலைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். எங்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதால் அவர்களின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் கோவில் நிர்வாக குழுவைச் சேர்ந்த வினோத் வாரியா கூறுகையில், “நாங்கள் எந்த மதக் கட்டுமானங்களையும் இழிவுபடுத்தவில்லை. கோவில் பராமரிப்புப் பணிகளின் போது இடம்பெயர்த்து வைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுகிறோம்” என்று ஜெயின் சமூகத்தினரிடம் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.