15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

News image
Updated On :5 ஜூன் 2024, 2:47 am

மும்பை வட மேற்கு தொகுதியில் சிவசேனை(ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, வாய்கர் 4,52,644 வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் அவரது நெருங்கிய போட்டியாளரான சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) அமோல் கிர்த்திகர் 4,52,596 வாக்குகளைப் பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது இரு வேட்பாளர்களும் போட்டிபோட்டு முன்னிலை வகித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் கீர்த்திகர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்த நிலையில் கடைசியில் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வான வைகர், இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்க்கட்சியான சிவசேனை அணையிலிருந்து (உத்தவ் தாக்கரே அணி) முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு மாறினார்.

கடைசி நிமிடத்தில் மக்களவைத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.