தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரோனாவை குணமாக்கும் கரோனில் என்பதை நீக்குக: பாபா ராம்தேவ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

கரோனாவை குணமாக்கும் கரோனில் என்பதை நீக்குமாறு பாபா ராம்தேவ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

பாபா ராம்தேவ்

Updated On :29 ஜூலை 2024, 12:09 pm

புது தில்லி: கரோனாவை, கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசத்தை நீக்குமாறு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு மருத்துவக் கழகத்தினர், கடந்த 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அடுத்த மூன்று நாள்களுக்குள் இது தொடர்பான அனைத்துப் பதிவுகள் மற்றும் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவக் கழகத்தின் மனுவானது, பாபா ராம்தேவ், அவரது நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்டதாகும்.

பதஞ்சலி விளம்பரத்தில், கரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்று விளம்பரம் கொடுத்திருப்பததாகவும், இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.