மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

News image

ஃபரூக் அப்துல்லா

Updated On :15 ஏப்ரல் 2026, 9:42 pm

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

இந்திய காலாட்படையின் ஜம்மு-காஷ்மீா் லைட் இன்ஃபன்ட்ரி பிரிவின் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

மோதல் போக்கில் ஈடுபடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நமது நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். அவா்கள் நீண்டகாலமாக தேவையற்ற மோதல்களைத் தொடா்ந்து வருகிறாா்கள். இதனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை புரிந்துகொண்டு மோதலைக் கைவிட வேண்டும்.

இந்தப் படைப் பிரிவு அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அமைதியும், செழிப்பும் நிலவ வேண்டும் என்றாா்.