திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகப் பதவியேற்று இரண்டாண்டுகள் நிறைவுசெய்த நிலையில், ஒருநாள் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுடன் உரையாடினார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக மூன்றாம் ஆண்டில் திரௌபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் திரௌபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக மாறி கலந்துரையாடினார்.
மாணவர்களுடனான உரையாடலில், இன்றைய மாணவர்கள் திறமைசாலிகள் என்பதால் உங்களிடம் பேச வேண்டும் எனக் கடந்த பல நாள்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களைப் பற்றியும் கேட்டறிந்தார். அவர்கள் விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் ஆக விரும்புகிறார்கள் என்பதைக் கேட்ட பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடினார். நீர், பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் மற்றும் மரங்கள் அனைத்தும் அதன் தாக்கத்தை உணர்கின்றனர். புவி வெப்பமடைதல் காரணமாக, நாட்டின் சில பகுதிகள் வறட்சியை எதிர்கொள்கின்றன. எனவே, தண்ணீரைச் சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். தண்ணீர் வீணாவதைக் குறைத்துப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்க மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்க வேண்டும்.
மாணவர்களான உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!
ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு




