பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் பழைய முறையைக் கொண்டுவர வேண்டும்: மாயாவதி

நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள்

News image
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
Updated On :25 ஜூலை 2024, 10:10 am

Parvathi

தேசிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து மருத்துவ சேர்க்கைக்கான "பழைய முறையை" மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது தீவிர பிரச்னையாக மாறி நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பான அவரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற முக்கியமான தேர்வை முறையாக நடத்த முடியும் என்று மக்களுக்கு உறுதியளிக்க மத்திய அரசு தவறிவிட்டது, இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.

பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஏன் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் நுழைவுத்தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிவு, ஆள்மாறட்டம் உள்ளிட்ட தொடர் சர்ச்சை நிலவி வருகின்றது. மேலும் நீட் இளநிலை மறுதேர்வு குறித்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.