மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கேஜரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

தொடர்ந்து மூவரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்தது..

News image

மணீஷ் சிசோடியா, கேஜரிவால், கவிதா

Updated On :25 ஜூலை 2024, 7:33 am

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேஜரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா ஆகியோர் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பிப்ரவரி 28, 2023 அன்று தில்லி அமைச்சரவையிலிருந்து சிசோடியா ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, கலால் ஊழல் வழக்கில் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அவரை திகார் சிறையில் சிபிஐயும் கைது செய்தது.

கலால் வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். தொடர்ந்து அவரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.