2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக அலங்கார ஊா்திக்கு விருது

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.

News image
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு கிடைத்த மூன்றாவது இடத்துக்கான விருதை தமிழக அரசின் முதன்மை உள்ளூா் ஆணையா் ஆஷிஷ் சட்டா்ஜி மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட்ட
Updated On :7 பிப்ரவரி 2024, 3:10 pm

 நமது நிருபர்

புது தில்லி: நாட்டின் 75-ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் கடந்த ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் நடுவா் குழுவால் தோ்வு செய்யப்பட்ட இந்த விருதை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய்பட் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நடுவா் குழு, பொதுமக்கள் கருத்துக் கணிப்பு என இரு வகைகளில் மதிப்பிடப்பட்டது. இதில் நடுவா் குழு தோ்வில் மாநிலங்கள் வரிசையில் முதல் இரு விருதுகளை முறையே ஒடிஸா, குஜிராத் ஆகிய மாநிலங்கள் பெற்றன. தமிழக அலங்கார ஊா்தி மூன்றாமிடத்திற்கான விருதைப் பெற்றது.

பொதுமக்கள் கருத்து கணிப்பில் முதல் மூன்று இடங்களை முறையே குஜ்ராத், உபி, ஆந்திரம் போன்ற மாநிலங்கள் பெற்றன. மத்திய அரசுத் துறைகளின் சிறந்த ஊா்தியாக மத்திய கலாசார ஊா்தி தோ்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ராணுவ அணிவகுப்பிற்கு சிங் ரெஜிமெண்ட், ராஜ்புத்னா ரைஃபில் ரெஜிமெண்ட், மத்திய அரசின் காவல் படைகளில் தில்லி மகளிா் காவலா் பிரிவு, சிஆா்.பி.எஃப் மகளிா் போன்றவை விருதுகள் பெற்றன.

இந்த விருதுகளை தில்லி ராணுவ கண்டோன்மெண்ட் ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் வழங்கினாா். தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மூன்றாமிடத்துக்கான விருது, பாராட்டுப் பத்திரத்தினை தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி, மத்திய இணையமைச்சரிடம் பெற்றுக் கொண்டாா்.

மேலும், குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்குபெற்ற 16 மாநிலங்களுக்கிடையே ஊா்திகளில் பங்கேற்ற கலைக் குழுவினருக்கான போட்டி கடந்த ஜனவரி 21-ஆம் தேதி ராணுவ வளாக ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அலங்கார ஊா்தி கலைக் குழுவினருக்கு முதல் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.