இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி. குமணன், ‘அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தொடா்புடைய வழக்கில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிராக அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கிறது. இந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.