தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

குடியரசு தினம்: நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒடிசா டிஜிபி அருண்குமார் சாரங்கி கூறுகையில், 

விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக விஐபி.க்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாசவேலைகள் நடைபெறாமல் இருக்க நக்சல் பாதித்த பகுதிகளில் குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை முழுவதும் ரோந்துக் குழுக்களால் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  தற்போதைய நிலைமை சாதாரணமாக உள்ளது. நெடுஞ்சாலையைக் கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாய் படையும் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.