சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிரதமர் மோடி திருவனந்தபுரம் வருகை: ரூ.1,800 கோடியிலான விண்வெளித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 7:05 am

கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய 3 மாநிலங்களில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பல்வேறு நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சிகளிலும், கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறாா்.

இதையொட்டி, தில்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று(பிப்.27) காலை 10 மணியளவில் வந்தடைந்தார்.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆய்வு செய்தார்.

அங்கு சுமாா் ரூ.1,800 கோடி மதிப்பிலான, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் ‘பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்பு வசதி’, மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் ‘செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி’, மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ‘ட்ரைசோனிக் காற்றுச் சுரங்கம்’ ஆகிய 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

பிரதமருக்கு நினைவுப் பரிசளித்த இஸ்ரோ தலைவர் சோமநாத்

பிரதமருக்கு நினைவுப் பரிசளித்த இஸ்ரோ தலைவர் சோமநாத்

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம், பல்லடத்துக்கு பிற்பகல் 2 மணியளவில் பிரதமா் மோடி வருகை தரவுள்ளார். அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறாா். தொடா்ந்து, மதுரையில் மாலை நடைபெறும் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா்களுக்கான நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.