டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உ.பி.யில் தலைமைக் காவலர் எழுத்துத் தேர்வு ரத்து

உ.பி.யில் தலைமைக் காவலர் எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
- -
Updated On :24 பிப்ரவரி 2024, 11:22 am

PTI

லக்னௌ: வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த தலைமைக் காவலர் எழுத்துத் தேர்வை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.

பிப்ரவரி 17-18ஆம் தேதிகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், தேர்வெழுதிய இளைஞர்கள், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம் காரணமாக, தலைமைக் காவலர் எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வில் கிட்டத்தட்ட 48 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றிருந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோசடி செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.