பாட்னா: சத்தீஸ்கரில் உள்ள மருத்துவமனையில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், 18 மணி நேரத்துக்குப் பிறகு பிகாரில் உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர், தனது சொந்த மாநிலமான பிகாருக்குள் நுழைந்ததும் உயிர்பெற்றுள்ளார்.
பிகார் மாநிலம் பெகிசாரை என்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ராம்வதி தேவி (71) தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பிப்ரவரி 11ஆம் தேதி நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் ராம்வதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மறுநாள் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்து யோசித்த மகன்கள், அவரது சொந்த ஊரான பிகாருக்குக் கொண்டு செல்வதாக முடிவெடுத்தனர். தனியார் வாகனத்தை எடுத்துக் கொண்டு 18 மணி நேரம் பயணித்து பிகார் சென்றனர். அப்போது தாயின் உடலில் அசைவுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக பிகாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்ததில் அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மாரடைப்பு காரணமாக அப்பெண் மரணமடைந்திருக்கலாம். வாகனத்தில் கொண்டு வரும்போது அது சிபிஆர் கருவி போல செயல்பட்டு, உயிர்பிழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீடு திரும்பினாா் ராமதாஸ்

மகளிர் இடஒதுக்கீடு: நாட்டிலேயே சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


