டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி புகழாரம்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி, மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, வரும் 10ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருக்கிறது.

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 4:57 pm

PTI


புது தில்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி, மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, வரும் 10ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருக்கிறது.

விரைவில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசும்போது, எம்.பி. பதவி நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பாராட்டிப் பேசினார். அதாவது, மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்கள் இந்த நாட்டின் சொத்து. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறுமுறை இந்த அவையில் உறுப்பினராக இருந்து அலங்கரித்துள்ளார். கரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக இருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்ந்தார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின்போது, உடல் நலம் குன்றியிருந்தபோது கூட, சக்கர நாற்காலியில் வந்து தனது கடைமையை மன்மோகன் சிங் நிறைவேற்றினார். ஓய்வுபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வணக்கம் செலுத்திக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

டாக்டர் மன்மோகன் சிங், ஒரு தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகளால், அவையில் அவர் ஆற்றிய பங்களிப்பை இன்று நினைவுகூர விரும்புகிறேன். இவ்வளவு காலமாக, அவர் இந்த அவையையும் நாட்டையும் வழிநடத்திய விதத்துக்காக  மன்மோகன் சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பிரதமர் மோடி மாநிலங்களவையில் தனது உரையின் போது கூறினார்.

மேலும், ஓய்வுபெறும் எம்.பி.க்களின் அனுபவங்கள் இந்த நாட்டுக்கு உதவும். புதிய தலைமுறைக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.