ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரப் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம்ட கேட்டுக்கொண்டுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2024, 9:21 am


புது தில்லி: தேர்தல் பிரசாரப் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம்ட கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், போஸ்டர் ஒட்டுதல் போன்ற எந்த விதத்திலும், தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதேவேளையில், கட்சியோ அல்லது வேட்பாளரோ, தேர்தல் பிரசாரத்தில் எந்த வகையிலாவது குழந்தைகளை ஈடுபடுத்தினால், அதனை ஒருபோதும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என யாரும், தேர்தல் பிரசாரத்தின் போது குழந்தைகளை கையில் வைத்திருப்பது, தங்களது வாகனத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேரணி செல்வது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் பிசாரக் கூட்டங்களின்போது கவிதை சொல்வது, பாடல்கள் பாடுவது, பேச்சு, அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களைக் காட்சிப்படுத்துதல் உட்பட எந்த வகையிலும் அரசியல் பிரசாரப் பணியில் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கு இந்தத் தடை விதிக்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.