ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image

அத்வானி (கோப்பிலிருந்து)

Updated On :3 பிப்ரவரி 2024, 11:10 am


புது தில்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு அத்வானிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்.கே. அத்வானியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்றும் மோடி கூறியுள்ளார்.

அடிமட்ட தொண்டன் முதல் துணை பிரதமர் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றி நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார். உள்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்று பிரதமர் மோடி, அத்வானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவரது விவாதங்கள் எப்பொழுதும் முன்னுதாரணமாக இருக்கும்.  மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (96) இந்த விருது வழங்கப்படும் தகவலை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் கூறினார்.

90ஆம் ஆண்டுகளில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசாக முதல்முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, ​​கட்சியின் எழுச்சியை வடிவமைத்த பெருமைக்குரிய மற்றும் பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக இருந்தவர் எல்.கே. அத்வானி என்றும் மோடி  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.