முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுகள் 2024

சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

News image
Updated On :29 டிசம்பர் 2024, 2:35 am

DIN

ஜனவரி

9: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

25: ஐசிசியின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

Story image

மார்ச்

11: ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நொலன் இயக்கிய 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த நடிகர் பிரிவில் சிலியன் முர்ஃபிக்கும், சிறந்த இயக்குநர் பிரிவில் கிறிஸ்டோபர் நொலனுக்கும் விருது வழங்கப்பட்டது.

30: மறைந்த முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், செளதரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குர் ஆகிய நான்கு பேருக்கு பாரத ரத்னா விருது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் வழங்கப்பட்டது.

Story image

ஜூன்

16: 'விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதைக்காக தமிழகத்தைச் சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஆகஸ்ட்

7: நாட்டின் முதலாவது 'விஞ்ஞான் ரத்னா விருது' உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு அறிவிப்பு.

15: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

16: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. சிறந்த தமிழ் படம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (பின்னணி இசை), நடிகை நித்யாமேனன் (திருச்சிற்றம்பலம்) உள்ளிட்டோருக்கு விருது.

Story image

அக்டோபர்

4: 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திரைப்பட பாடகர் பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

டிசம்பர்

18: பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908' நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.