திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ராகுல், கார்கே இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்!

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

News image

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:52 am

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீருக்குச் செல்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டபேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளனர். முதலில் இரு தலைவர்களுக்கு ஜம்முவுக்கு சென்று பின்னர் ஸ்ரீநகருக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்று ஏஐசிசி பொதுச் செயலாளர் குலாம் அகமது மீர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ள மீர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் வியாழக்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடுவார்கள் என்றார்.

ஸ்ரீநகரில் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு, அவர்கள் மாகணங்களின் 10 மாவட்டங்களின் பணியாளர்களுடன் கலந்துரையாட பிற்பகலில் ஜம்முவுக்குச் செல்வார்கள். அதன்பிறகு தில்லி புறப்பட்டுச் செல்வார்கள் என்றார் அவர் கூறினார்.

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக செப்.18, செப்.25, அக்.1 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.