தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தமிழ்நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு பணியாது! வேளச்சேரியில் கார்கே!

வேளச்சேரியில் நடைபெற்ற மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம் பற்றி...

News image

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - INC

Updated On :21 ஏப்ரல் 2026, 7:05 am

ஒருபோதும் அடக்குமுறைக்கு தமிழ்நாடு பணியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னையில் பிரசாரத்தில் மேற்கொண்டுள்ளார்.

வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மெளலானாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

”அரசியல் என்பது வெறும் பேச்சில் மட்டுமல்ல, செயலில் இருக்கிறது. நமது நாட்டில் கல்வி என்ற கருவிதான் முன்னேற்றத்துக்கான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நமது பிரதமர் மோடி அவ்வாறு பார்ப்பதில்லை. ஏழைகளின் எட்டாக் கனியாக மாற்றியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும்.

திமுக அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்களை சிந்தியுங்கள், விடியல் பேருந்து பயணத்திட்டம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதத்துக்கு ரூ. 1,000 சேமிக்கிறார்கள். 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார ரீதியில் வேகமாக 11% வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை பாஜக தடுக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துறது. நாட்டின் வளர்ச்சிக்கு அதிகளவில் பங்காற்றினாலும் குறைந்தபட்ச நிதியே கொடுக்கப்படுகிறது. தில்லிக்கு பணியாததால் கல்விக்கான நிதி முடக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் இழப்பீடுகளும் தமிழ்நாட்டுக்கு குறைவாகவே விடுவிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் ஆளுநர் குறுக்கிடுகிறார். நடுநிலையுடன் செயல்பட வேண்டிய ஆளுநர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இது கூட்டாட்சிக்கு எதிரானது. ஒருபோதும் தமிழ்நாடு பணியாது.” என்றார்.

Summary

Tamil Nadu will never bow down to oppression! Kharge in Velachery!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.