ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மரத்திற்கு ராக்கி கட்டி கொண்டாடிய பிகார் முதல்வர் நிதீஷ்!

மரத்திற்கு ராக்கி கட்டி விருக்ஷா சுரக்ஷா திவாசைக் கொண்டாடினார்.

News image
மரத்தில் ராக்கி கட்டிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
Updated On :19 ஆகஸ்ட் 2024, 10:22 am

PTI

பிகார் முதல்வரும், ஜக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் பாட்னாவில் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிகாரில் உள்ள ஒரு மரத்திற்கு ராக்கி கட்டி விருக்ஷா சுரக்ஷா திவாசைக் கொண்டாடினார்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பசைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பான அவருடைய எக்ஸ் பதிவில்,

ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு மற்றும் பாசத்தின் பண்டிகையாகும். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநில மற்றும் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் தேசிய தலைநகரில் பள்ளி மாணவிகளுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.