ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வரவேற்பு அளித்துள்ளார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழங்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்கியிருக்கிறது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றைரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மணீஷ் சிசோடியாவின் எக்ஸ் பதிவில்,
உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டுவதாகவும், வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியின் முன்னாள் துணை முதல்வரான சிசோடியா கடந்த பிப்ரவரி 26, 2003 அன்று சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மார்ச் 9, 2023ல் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.
இந்த நிலையில் ரூ.10 லட்சம் செலுத்துவதோடு, தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு
திரைக் கதிர்
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் தொழிலாளி கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு




