தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் மனு தள்ளுபடி!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமாரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

பிபவ் குமார்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:19 am

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கடந்த மே 18-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள குமார், தனது கைது சட்டவிரோதமானது என்றும், முற்றிலும் மீறப்பட்ட செயலாகும் என்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தில்லி காவல்துறை இந்த மனுவை எதிர்த்தது. குமார் அவசரமாக கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சட்டத்தின்படியே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணை நடத்தப்பட்டதில், சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கோரி பிபவ் குமாரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக, அவரது ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.