புது தில்லி: நியாய பத்திரம் என்ற பெயரில் வெளியான தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடிதம் எழுதியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே எழுதியிருக்கும் இரண்டுபக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் நியா பத்திரம் என பெயரிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத விஷயங்களைக் கூட, இடம்பெற்றிருப்பதாக, தனது ஆலோசகர்கள் அளிக்கும் தவறான தகவல்களை வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
நாட்டு மக்களின் வளங்களையெல்லாம் பறித்து, அவற்றை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்ததைத் தொடர்ந்து கார்கே, இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அது மட்டுல்லாமல், பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் கார்கே, நியாய பத்திரம் என்பது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கும் பத்திரம். இதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைவைத்து பிரிவினையை ஏற்படுத்துவது உங்கள் வழக்கமாகிவிட்டது. உங்களது பேச்சு, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வார்த்தைகளைக் கூட, உங்களது ஆலோசகர்கள் தவறான தகவல்களை உங்களுக்கு அளித்துவிடுகிறார்கள்.
எனவே, உங்களை நேரில் சந்தித்து நியாய பத்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்க தயாராக இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதன் மூலம், பிரதமர் மோடி, மக்களுக்கு தவறான தகவல்களை பகிர்வது தடுக்கப்படும் என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதி பிரதமர் மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!

மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


