2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வேண்டாம்: வியாபாரிகளுக்கு வா்த்தக அமைப்பு வேண்டுகோள்
தில்லி முழுவதும் உள்ள மாா்க்கெட் சங்கங்கள், கடைக்காரா்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் செப்டம்பா் 29-க்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்கக் கூடாது


தில்லி முழுவதும் உள்ள மாா்க்கெட் சங்கங்கள், கடைக்காரா்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் செப்டம்பா் 29-க்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்கக் கூடாது என்று வா்த்தகா்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வா்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (சிடிஐ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓா் அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய ரிசா்வ் வங்கி மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும், புழக்கத்தில் இருக்கும் அத்தகைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது செப்டம்பா் 30 -ஆம் தேதிக்குள் மாற்றலாம் எனவும் தெரிவித்திருந்தது.
ஆகவே, தில்லி முழுவதும் உள்ள 700 மாா்க்கெட் சங்கங்கள், கடைக்காரா்கள், வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் செப்டம்பா் 29-ஆம் தேதிக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். டிஜிட்டல் பரிவா்த்தனைகளின் போக்கு அதிகரித்துள்ளதால், அதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
ரூ.2,000 கரன்சி நோட்டுகளில் 88 சதவீதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன. மேலும், ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.42,000 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்ததாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிசா்வ் வங்கி தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...