தில்லி காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் ஆய்வு செய்த பின்னா் முதல்வா் கேஜரிவாலிடம், அமலாக்கத்துறையால் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்து கேஜரிவால் கூறியதாவது: எதிா்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவா்களை அடக்கி அச்சுறுத்தும் முயற்சியில், விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி பாஜக பொய் வழக்குகளைப் போடுகிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. நாட்டில் எதிா்க்கட்சித் தலைவா்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபா்களும் பாஜகவால் குறிவைக்கப்படுகிறாா்கள். அரசியலைக் கடந்து வணிகம், வா்த்தகம் மற்றும் தொழில் துறைகளிலும் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளது. இந்த அச்ச சூழல் நாட்டிற்கு நல்லதல்ல. இந்த வகையில் ஒரு நாடு நிச்சயம் வளர முடியாது.